இந்தியாவில் மொத்த விலை பணவீக்க விகிதம் 12.94% உயர்வு – ஒன்றிய அரசு தகவல்!
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் மொத்த விலை பணவீக்க விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு, கிட்டத்தட்ட 12.94% உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பண வீக்கம்
இந்திய பொருளாதாரத்தை நிர்ணயிப்பது நாட்டின் மொத்த பண வீக்கத்தின் அளவு தான். அந்த வகையில் பணவீக்கத்தின் மதிப்பை கண்டுபிடிக்க மொத்த விலை குறியீட்டு எண் என்ற முறை பயன்படுகிறது. அதன் படி இந்தியாவில் மொத்த விலை பணவீக்க விகிதம் உயர்வதற்கான காரணம் கச்சா எண்ணெய்களின் விலை உயர்வு என கூறப்படுகிறது.
LIC வாடிக்கையாளர்களுக்கு ரூ.70 லட்சம் வரை வருமானம் – வெளியான முக்கிய அறிவிப்பு!!
அதாவது ஏறத்தாழ கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்றினால் பல பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஒரு ஆண்டாக இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வந்த சூழலில், இந்த பண வீக்கம் இந்தியாவின் பொருளாதாரத்தை மேலும் ஒரு படி உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் இந்தியாவில் கடந்த மே மாதத்தில் மொத்த விலை பணவீக்க விகிதத்தின் அளவு இதுவரை இல்லாத வகையில், 12.94% உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய் மற்றும் அலை உற்பத்தி பொருட்களின் விலை உயர்வால் இந்த பணவீக்க விதிதம் அதிகரித்துள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.