Wipro, TCS நிறுவனத்தை தொடர்ந்து இந்த ஐடி ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு – குஷியில் பணியாளர்கள்!!
ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை தக்க வைத்து கொள்ள பல்வேறு வகையான சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் Wipro, TCS நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்கியதை தொடர்ந்து தற்போது மற்றொரு நிறுவனமும் சம்பள உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சம்பள உயர்வு
இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் ஐடி நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை மேம்படுத்த தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தவாறு பணிபுரியுமாறு அறிவுறுத்தினர். மேலும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தினர். அதாவது வீட்டில் அலுவலக சூழலை ஏற்படுத்த வசதியாக இன்டர்நெட் சேவைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே செய்தன. இதனால் ஊழியர்கள் எந்த நிறுவனங்களில் அதிக சலுகைகளை பெற முடிகிறது என தேட ஆரம்பித்தன.
Follow our Instagram for more Latest Updates
அதனால் Wipro, TCS உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களிடம் ஊழியர்களை தக்க வைத்து கொள்ள பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் Wipro நிறுவனம் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து TCS நிறுவனமும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்கியுள்ளது. இதற்கு அடுத்த வரிசையில் தற்போது அடுத்த ஐடி நிறுவனமான Cognizant நிறுவனமும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
SBI வங்கியில் Investigating Officer வேலைவாய்ப்பு – ஓய்வு பெற்றவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு
Exams Daily Mobile App Download
மேலும் இது தொடர்பான அறிக்கையில், Cognizant நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்த formal eLetters கிடைத்துள்ளதாக கூறியுள்ளனர். இந்நிறுவன ஊழியர்களுக்கு 10% வரை சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் ஊழியர்களுக்கான பதவி உயர்வு இம்மாதத்திற்குள் அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.