தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு அவர்களின் பணிக்கு தகுந்த சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு!
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக கட்சியின் சார்பில் ஏகப்பட்ட வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கின்றனர். இந்நிலையில், கொரோனா காலத்தில் தன் உயிரையும் பணயம் வைத்து நோயாளிகளை கவனித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஆனால், தற்போது வரை அரசு ஊதிய உயர்வு தொடர்பான எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. மேலும், மற்ற மாநிலத்துடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ ஊழியர்களுக்கு ரூ.40,000 வரையிலும் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது.
EPFO பயனர்களின் கணக்கில் வட்டித்தொகை – எப்படி சரிபார்க்கலாம்? தெரிஞ்சுக்கலாம் வாங்க!
இந்நிலையில், அரசு மருத்துவர்களின் உன்னதமான பணியை போற்றும் வகையிலும், அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டும் அவர்களின் பணிக்கு தகுந்த சம்பளத்தை அரசு வழங்க வேண்டும் என தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அரசு உடனடியாக ஊதிய உயர்விற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும், மருத்துவர்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.