தமிழகத்தின் 9 மாவட்ட மக்கள் கவனத்திற்கு – உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் ஆதார் அட்டை உள்ளிட்ட 11 அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் அரசின் நிர்வாக பணிகளுக்காக பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரு தினங்களிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இரு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 9 மாவட்டங்களும் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
அக்.15 க்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை – சென்னை மாநகராட்சி!
மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வழிகாட்டுதல்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச் சாவடி சீட்டு இல்லாதவா்கள் ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, மேலும் புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக மருத்துவ காப்பீடு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றை காண்பித்து வாக்களிக்கலாம்
விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள் போன்ற 11 ஆவணங்களை காண்பித்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அனுமதி சீட்டு பெற்றவர்கள் ஆகியோர் மட்டுமே வாக்கு சாவடியில் நுழைய வேண்டும், மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.