தமிழகத்தில் பெண்களுக்கான ரூ.1000 உரிமைத்தொகை – முதல்வர் இறுதிக்கட்ட ஆலோசனை!
பெண்களுக்கான உரிமைத்தொகை திட்டம் தமிழகத்தில் செப் 15 முதல் அமலுக்கு வர இருக்கும் நிலையில் தகுதியானவர்கள் குறித்து நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றுள்ளது.
ரூ.1000 உரிமைத்தொகை:
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கு ரூபாய் 1000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் மகளிருக்கான ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் யார் யாருக்கெல்லாம் இந்த ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதாவது, நடைபாதையில் வணிகம் செய்யும் பெண்கள், மீனவ மகளிர்கள், கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் பெண்கள், சிறிய கடை நடத்தி வரும் பெண்கள், சிறு தொழில் மற்றும் ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியும் பெண்கள் ஆகியோருக்கு ரூபாய் ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்பட இருப்பதாக மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜூன் 27 முதல் ஜூலை 3 வரை 1 வாரம் பொது விடுமுறை அறிவிப்பு – அரசு அதிரடி உத்தரவு!
ஆனால், எதன் மூலமாக ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது குறித்தான அறிவிப்பு தற்போது வரையும் வெளியிடப்படவில்லை. மேலும், ரேஷன் கடைகளில் மைக்ரோ ஏடிஎம் கருவியின் மூலமாகவே வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ரூபாய் 1000 வழங்குவதற்கான வழிமுறைகளை நிர்ணயித்தல், அரசாணை வெளியிடுவதும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதம் செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.