தமிழக வெள்ள நிவாரணத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு உத்தரவு!

0
தமிழக வெள்ள நிவாரணத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு உத்தரவு!
தமிழக வெள்ள நிவாரணத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு உத்தரவு!
தமிழக வெள்ள நிவாரணத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு உத்தரவு!

சென்னையில் புயல் மழை பாதிப்பு காரணமாக நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.

நிதி ஒதுக்கீடு:

டிசம்பர் மூன்றாம் தேதி வங்கக்கடலில் உருவான மிக் ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்கள் அதிகபட்ச பாதிப்பை சந்தித்துள்ளது. பருவமழைக்கும் முன்னதாகவே தமிழக அரசு மழை நீர் வடிகால் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு நிலையிலும் சேதமானது அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் அன்றாட பணிகளை தொடர முடியாமலும், குடிநீர், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமம் அடையும் நிலையிலும் உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் மழை நின்று இரண்டு நாட்களைக் கடந்த நிலையிலும் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் இன்னும் வெளியேறாமல் உள்ளது. இந்நிலையில் மழை வெள்ள நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ.5060 கோடி நிதி வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு முதல் கட்டமாக ரூபாய் 450 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – இந்த பகுதியில் மழை கொட்டும்.. இன்றைய வெதர் அப்டேட்!

மேலும் சென்னையில் வெள்ள மேலாண்மை என்று புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூபாய் 561.29 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதன் மூலமாக வெள்ளத்தை தாங்க கூடிய வகையில் சென்னை நகரம் மாறும் என்றும் உறுதியளித்துள்ளார். நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமரை சந்தித்த திமுக எம்பி டி ஆர் பாலு தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!