தமிழகத்தில் பள்ளிகளுக்கு ரூ.38.37 கோடி மானியம் – 50% தொகையை விடுவித்து உத்தரவு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.38.37 கோடியில் 50% தொகையை விடுவித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலைமையை சரி செய்ய அரசு முதற்கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரிகளை மூடியது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆன்லைன் வகுப்புகள் மூலமாக மாணவர்களுக்கு பாடங்களை முழுவதுமாக முடிக்கவில்லை என்பதால் கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் 28 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!
2021-22 ஆம் கல்வியாண்டு தொடங்கி 3 மாதங்கள் ஆன நிலையில், தற்போது வரை ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
TN Job “FB Group” Join Now
மேலும் அனைத்து ஆசிரியர்களும், பணியாளர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு சார்பில் தமிழகத்தில் உள்ள 6,177 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் நடப்பு கல்வியாண்டுக்கு ரூ.38.37 கோடி மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன் தயாரிப்பு பணிகளை செய்ய ரூ.38.37 கோடியில் இருந்து 50% தொகை தற்போது விடுவித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.