தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசு – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணம் வழங்குவது குறித்து அரசுக்கு கோரிக்கைகள் அதிக அளவில் எழுந்து வருகிறது.
பொங்கல் பரிசு:
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, சர்க்கரை போன்ற பொருள்களுடன் ஒரு முழு கரும்பும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தற்போது பொங்கல் பரிசு கோரிக்கையை முன்வைத்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரு வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாத சூழ்நிலை எழுந்துள்ளது.
EPF தொழிலாளர்களுக்கான பென்ஷன் தொகை ரூ.3000 ஆக உயர்வு – மத்திய அரசின் முடிவு!!
அதன் காரணமாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், ரொக்கப் பரிசு வழங்குவது குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. தமிழக அரசு எந்த நிபந்தனைகளும் இன்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 3000 பொங்கல் பரிசு உடன் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்வதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.