முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ. 3,000 ஆக உயர்வு – முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!
ஹரியானா மாநிலத்தில் முதியோர் பென்ஷன் தொகை மாதம் ரூபாய் 3000 ஆக உயர்த்தப்பட உள்ளதாக முதல்வர் மனோகர்லால் கட்டார் அறிவித்துள்ளார்.
பென்ஷன் தொகை உயர்வு:
ஹரியானா மாநிலத்தில் முதியோர்களுக்கான பென்ஷன் தற்போது மாதம் ரூபாய் 2750 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹரியானா மாநில விவசாய மேம்பாட்டு கண்காட்சி 2023 நிறைவு விழா ஹரியானா மாநிலத்தில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் கலந்து கொண்டார். அப்போது பேசிய முதல்வர் ஜன் சம்பத் திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதிய திட்டம் உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்படி பென்ஷன் தொகை 9 % முதல் 10% உயர்த்தப்பட்டு மாதம் ரூ.3000 வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
மிஸ்டு கால் மூலம் சிலிண்டர் பெறலாமா? – என்ன வழிமுறைகள்!
இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பயனாளிகள் பயனடைவார்கள். மேலும் விழாவில் முதல் கட்டமாக 22 பயனாளிகளுக்கு பென்ஷன் தொகைக்கான சான்றிதழை முதல்வர் வழங்கினார். அதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு திணை பயிர் கொள்முதல் திட்டம் குறித்து பேசி உள்ளார். திணை குவிண்டால் ஒன்றுக்கு ₹2,200-க்கு கொள்முதல் செய்யப்படும் என்றும், செப்டம்பர் 25ஆம் தேதிக்கு பின்னர் திணை பயிரை விற்பனை செய்தவர்களுக்கு ரூபாய் 300 தனித்தொகையாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். முதல்வரின் அறிவிப்பு விவசாயிகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.