தமிழகத்தில் ரூ.1,000 பொங்கல் பரிசு.. ஜாக்பாட் திட்டம் – அரசின் முடிவு!
தமிழகத்தில் ரேஷன் அட்டை மூலம் பொது மக்களுக்கான பொங்கல் பரிசு தொகையை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொங்கல் பரிசு:
தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பரிசுகளை வழங்கி வருகிறது. இதற்கு முன்னதாக இலவசமாக வேஷ்டி, சேலை, பொங்கல் வைப்பதற்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பொங்கல் பொருட்களுக்கான தரம் குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சில ஆண்டுகளாக தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு ரூபாய் ஆயிரம் ரொக்கப்பணம் பரிசாக வழங்கி வருகிறது.
அனைத்து பள்ளிகளுக்கும் டிச. 25 முதல் விடுமுறை – கல்வி வாரியம் முக்கிய அறிவிப்பு!
தற்போது தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 மாதம் தோறும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், பொங்கல் பரிசு குறித்த பல்வேறு கேள்விகளும் எழுந்து வந்தது. இந்நிலையில் ஜனவரி மாதம் ரேஷன் கடைகளின் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நேரடியாக ரூபாய் 1000 ரொக்க பணம் பொங்கல் பரிசாக வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.