பேதி மாத்திரை கலந்த பாலை குடித்த பாலு, யசோதா – இன்றைய “ரோஜா” சீரியல் ப்ரோமோ!!
சன் டிவி ரோஜா சீரியலில் மாத்திரை கலந்த பாலை ரோஜா குடிக்க செல்ல அர்ஜுன் தடுத்து நிறுத்தி, அதை பாலு மற்றும் யசோதாவை குடிக்க வைக்கின்றனர். அதனால் அவர்கள் பாத்ரூமிற்கு ஓடி கொண்டிருக்கின்றனர். பின்னர் ரோஜா பரிகாரம் செய்ய கிளம்பி வருகிறார்.
ரோஜா சீரியல்:
சன் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக ரோஜா சீரியல் தொடர்ந்து TRPயில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த சீரியல் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் பாலுவும், யசோதாவும் சேர்ந்து ரோஜாவின் பாலில் பேதி மாத்திரைகளை போடுகின்றனர். அதை எப்படியாவது ரோஜாவை குடிக்க வைக்க வேண்டும் என திட்டமிடுகின்றனர்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் GP முத்து? அவரே சொன்ன விளக்கம்!
அர்ஜுன் அம்மா அந்த பாலை ரோஜாவிடம் கொடுக்கிறார். அங்கே அர்ஜுனும் இருக்கிறார். ரோஜா சந்தோசத்துடன் வாங்கி குடிக்கச் செல்கிறார். அப்போது அர்ஜுன் அந்த பாலை குடிக்க விடாமல் தடுக்கிறார். பாலுவையும், ரோஜாவையும் மாத்திரை கலந்த பாலை குடிக்க வைக்கிறார் அர்ஜுன். அப்போது அங்கே பாட்டியும் நிற்கிறார். அந்த பாலை குடித்த பின்னர் பாலுவும் யசோதாவும் பாத்ரூம் நோக்கி ஓடுகின்றனர்.
விஜய் டிவி சீரியல் நடிகையின் சோகமான திருமண வாழ்க்கை – வாழ்க்கை கதை!
அதன் பின்னர் பாலு முடியாமல் கீழே விழுகிறார். அதை பார்த்த அர்ஜுன் பால் குடிச்சவங்க ஏன் பாத்ரூம் பக்கம் போறாங்க என பாட்டியிடம் கேள்வி கேட்கிறார். பின்னர் ரோஜா செண்பகம் தான் என்னுடைய அம்மா என நிரூபிக்க கடுமையான பரிகாரம் ஒன்றை செய்யப் போகிறார். அதற்காக மஞ்சள் சேலையில் சாமி போல வருகிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.