விஜய் டிவி சீரியல் நடிகையின் சோகமான திருமண வாழ்க்கை – வாழ்க்கை கதை!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாவம் கணேசன்” சீரியலில் கணேசனின் மூத்த அக்கா சித்ராவாக நடிப்பவர் தான் நடிகை விலாஷினி. இவர் தனது வாழ்வில் சந்தித்த சோதனைகளை பற்றி மனம் திறந்துள்ளார்.
பாவம் கணேசன் நடிகை:
தமிழ் வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலரும் சுலபமான முறையில் ரசிகர்களிடம் பரீட்சையமாகி விடுகின்றனர். குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி போன்ற பிரபல சேன்களில் வரும் சீரியல் நடிகர், நடிகைகள் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் புதுமுகமாக இருந்தாலும் சீரியல் வெற்றி பெற்றதன் மூலமாக புகழின் உச்சிக்கு சென்றுள்ளனர். அந்த வகையில் புகழ் பெற்றவர் நடிகை விஷாலினி.
விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடும் சரவணன், துரத்தப்படும் சந்தியா – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!
விஜய் டிவியில் பாவம் கணேசன் சீரியலில் கணேசனின் மூத்த அக்கா சித்ராவாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் கணவருக்கு மிகவும் பயந்து நடப்பவர் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அம்மா வீட்டில் பேசக் கூட கணவரிடம் அனுமதி பெற வேண்டிய சூழல் இருக்கும். வீட்டுக்கு கஷ்டம் தரக்கூடாது என நினைத்து சோகங்களை மறைத்து வாழும் ஒரு சராசரி பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சீரியல் மட்டுமில்லாமல் திருமண வாழ்க்கையிலும் இவருக்கு கணவர் கொடுமை நடந்துள்ளதாக தனியார் யூடூப் சேனலில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ களமிறங்கும் மற்றொரு திருநங்கை – வெளியான சூப்பர் அப்டேட்!
அதில் அவர் கூறியதாவது, இந்த சீரியலில் வரும் கணவரை விட எனது சொந்த கணவர் மிகவும் மோசமானவர். மேலும், இவரது கணவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இவரை ஏமாற்றி இருக்கிறார். அதன் பின்னர் கணவரிடம் விவாகரத்து பெற்று தற்போது இவர் தனியாக இருக்கிறார். இவர் பிரபல ரேடியோ சேனலில் ஆர்.ஜேவாக பணியாற்றியவர் மற்றும் இவர் இசைஞானி இளையராஜவின் உறவுக்கார பெண் ஆவார். மருது படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு அசத்தலான கிராமத்து குரலில் குரல் கொடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.