IPL 2021 : டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஆக ரிஷப் பந்த்! ஷ்ரேயஸ் ஐயருக்கு காயம்!
ஐபிஎல் 2021 தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளுக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஆக ரிஷப் பந்த் நீடிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஷ்ரேயஸ் ஐயருக்கு ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் அப்டேட்ஸ்:
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானங்களில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகளின் வீரர்கள் துபாய் சென்று தனிமைப்படுத்துதலுக்கு பின்னர் பயிற்சியை தொடங்கி உள்ளனர். மேலும் தொடரில் இருந்து விலகியுள்ள நட்சத்திர வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக எல்லையோர மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகள் – முதல்வரிடம் பரிந்துரை!
இந்நிலையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மீதமுள்ள போட்டிகளில் கேப்டன் ஆக யார் நீடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்தது. இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுலுக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நடந்த ஒருநாள் போட்டியின் போது தோள்பட்டை காயம் ஏற்பட்டது. ஆனால் தோள்பட்டை அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்து உள்ளார். மேலும் ஐபிஎல்லின் மீதமுள்ள போட்டிகளில் விளையாட பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் உடல் நலத்துடன் ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட தயாராக உள்ளார் என்றாலும், டெல்லி கேபிட்டல்ஸ் நிர்வாகம் அவருக்கு குணமடைய அதிக நேரம் கொடுக்க விரும்புகிறது என கூறப்படுகிறது. இதன் விளைவாக, ரிஷப் பந்த் கேப்டனாக நீடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றது. டெல்லி அணி செப்.22ம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்கு எதிராக முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளது.