தமிழக எல்லையோர மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகள் – முதல்வரிடம் பரிந்துரை!

0
தமிழக எல்லையோர மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகள் - முதல்வரிடம் பரிந்துரை!
தமிழக எல்லையோர மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகள் - முதல்வரிடம் பரிந்துரை!
தமிழக எல்லையோர மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகள் – முதல்வரிடம் பரிந்துரை!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் தலைமை செயலர் ஆகியோர் மாநிலத்தின் எல்லையில் உள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்த பரிந்துரைத்துள்ளனர்.

முதல்வரிடம் பரிந்துரை:

தமிழகத்தில் வரும் புதன்கிழமையான செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில் மூடப்பட்ட கல்வி நிலையங்கள் அனைத்தும் தற்போது மாநிலத்தில் கொரோனா குறைந்து உள்ளதால் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு குறைந்த மற்ற மாநிலங்களில் முன்னதாகவே கல்வி நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கல்வி நிலையங்களை திறக்க பல இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதனால் தமிழக அரசு பல கட்ட ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு கல்வி நிலையங்களை திறக்க அளித்துள்ளது.

2 வயது குழந்தையை அடித்து சித்ரவதை செய்த தாய் சிறையில் அடைப்பு – பரபரப்பு சம்பவம்!

இந்நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு வருகிறது. நாட்டின் தினசரி பதிப்பில் 60% அளவிற்கு கேரளா மாநிலத்தில் மட்டும் பதிவாகிறது. இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் தற்போதைய கொரோனா சூழல், தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தொற்று பரவல் அதிகரித்துள்ள கேரள மாநிலத்தில் இருந்து வருவோருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

மேலும் கேரள மாநிலத்தில் பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் முடிவை தள்ளி வைக்கலாமா என்றும், தமிழக, கேரளா மாநிலங்களின் எல்லையில் உள்ள மாவட்டங்களில் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை தொடருவது பற்றி சுகாதாரத்துறையினர் முதல்வரிடம் பரிந்துரைத்துள்ளனர். இது குறித்த முடிவு விரைவில் அறிவிக்கப்படும். நாளை மறுநாள் தமிழகத்தின் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அரசு அறிவித்துள்ள படி பள்ளிகள் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!