தமிழகத்தில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பணிபுரியும் முதல்வர்களின் ஓய்வு பெறும் வயதை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
அரசுக்கு வலியுறுத்தல்:
தமிழக உயர்கல்வி துறையின் கீழ் மாநிலத்தின் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகள் என்ற மூன்று பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இந்த மூன்று பிரிவுகளிலும் கல்லூரி முதல்வர்களின் ஓய்வு பெறும் வயதானது வேறுபட்டு காணப்பட்டு வருகிறது. அரசு கல்லூரி பல்கலைக்கழகங்களில் ஓய்வு பெறும் வயது 60 ஆகவும், சுயநிதி கல்லூரிகளில் முதல்வர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆகவும் அரசாணையில் உள்ளது.
மேலும் ஒரு சில பல்கலைகளில் 65 வயதாகவும் இருந்து வருகிறது. இதனால் பல்கலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணன் அவர்கள அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்கள். அதன்படி உயர் கல்வி துறையின் கீழ் ஆசிரியர்கள், முதல்வர்கள் அனைவருக்கும் ஓய்வு வயது ஒரே மாதிரியாக வரைமுறை செய்ய வேண்டும். பாரபட்சங்கள் இருக்கக் கூடாது எனவும், அரசு இது குறித்த அரசாணையை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.