ஆகஸ்ட் 8 வரை கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 8ம் தேதி வரை தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் அவர்கள் அறிவித்து உள்ளார்.
பக்தர்களுக்கு தடை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் தடுப்பூசிகள் செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து நோய் தடுப்பு பணிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. ஆடி 18, ஆடி அமாவாசை, கிருத்திகை போன்ற விசேஷ தினங்களை முன்னிட்டு கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் என்பதால் திருத்தணி, திருச்செந்தூர் போன்ற திருத்தலங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டுள்ளது. விழா காலங்களில் மக்கள் கூட்டத்தை தவிர்க்க மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவடையாத நேரத்தில், மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மாநில அரசுகள் இதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join No
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தற்போது தென்காசி மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் சங்கரன் கோவில், சங்கரநாராயண சுவாமி கோவில், தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில், தென்காசி மேல சங்கரன் கோவில் ஆகியவற்றில் பக்தர்களுக்கு ஆகஸ்ட் 8ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தினசரி பூஜைகள் கோவில் வளாகத்தில் வழக்கம் போல நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.