ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் புதிய பாதிப்புகள் வெகுவாக குறைந்து வரும் நிலையில், உயர்கல்வி நிறுவனங்களை ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் மீண்டுமாக திறக்க சண்டிகர் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கல்லூரிகள் திறப்பு
நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனிடையே கொரோனா 2 ஆம் அலை காரணமாக இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக மூடப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தொற்று குறைந்து வரும் சூழலில் மாநிலங்கள் தோறும் கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் “இந்த” மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
அந்த வகையில் சண்டிகர் மாநிலத்திலும் ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு மேல் உயர்கல்வி நிறுவனங்களை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சண்டிகர் மாவட்டத்தின் உயர்கல்வி இயக்குனரகம் பிறப்பித்த உத்தரவில், ‘ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு பிறகு, உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி நாட்காட்டியின் படி கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
முன்னதாக கடந்த ஜூலை மாதத்தில் மாநில நிர்வாகம் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை ஆகஸ்ட் முதல் மீண்டும் திறக்க அனுமதித்த பிறகு, அதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது. அதன் படி நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள், ஆசிரியகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும். கல்லூரி வளாகங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் பஞ்சாப் பல்கலைக்கழக வளாகத்தை மீண்டும் திறப்பது குறித்து அரசு இன்னும் முடிவு செய்யவில்லை.