தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய (TNPSC) காலிப்பணியிடங்கள் – அரசுக்கு கோரிக்கை!
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) காலியாக உள்ள செயலர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்பட 12 உறுப்பினர்களின் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
TNPSC காலிப்பணியிடம்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு தேவையான அலுவலர் மற்றும் பணியாளர்களை போட்டித்தேர்வு மூலம் நியமனம் செய்வது உள்ளிட்ட சில முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த குழுவில் 14 உறுப்பினர்கள், தலைவர், செயலர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் இருந்து TNPSC ல் 12 பணியிடங்கள் காலியாக இருந்தது.
TN Job “FB Group” Join Now
இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் தற்போது ஆணையத்தின் செயலர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தடைபட்டுள்ள, போட்டித்தேர்வுகளை மீண்டுமாக நடத்துவதற்கு இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என போட்டிதேர்வாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 62,224 பேருக்கு கொரோனா தொற்று – 2,542 பேர் பலி!!
இது குறித்து போட்டித்தேர்வு பயிற்சியாளர் நடராஜ் கூறுகையில், ‘தமிழகத்தில் அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளை நடத்தும் தேர்வாணையத்தில் பணியாளர்கள் குறைவாக காணப்படுவதால்,தேர்வுகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய 42 போட்டித்தேர்வுகளில் கடந்த 6 மாத காலத்தில் 2 தேர்வுகள் மட்டுமே நடைபெற்றது. அந்த வகையில் இன்னும் 40 தேர்வுகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. அதனால் TNPSC தேர்வாணையத்தில் தேவையான உறுப்பினர்களை பதவியில் அமர்த்தி, தேர்வுகளை முன்னெடுத்து நடத்துமாறு அரசுக்கு தேர்வர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.