இந்தியாவில் ஒரே நாளில் 62,224 பேருக்கு கொரோனா தொற்று – 2,542 பேர் பலி!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 62,224 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி நேற்று ஒரே நாளில் 2,542 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வீரியம் வெகுவாக குறைந்து வருகிறது. அதன்படி நாட்டில் தொடர்ந்து 9வது நாளாக கொரோனா தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்திற்கு குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்து வருகிறது. இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஜூன் 15 முதல் வார இறுதி, இரவு நேர முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
அதன்படி நேற்று ஒரே நாளில் புதிதாக 62,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஏற்பட்ட மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,96,33,105 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி 2,542 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் மொத்த கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 3,79,573 ஐ எட்டியுள்ளது. இதை அடுத்து நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 1,07,628 பேர் குணமடைந்துள்ளனர்.
தளர்வுகளுடன் கூடிய இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
இதனால் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,83,88,100 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் 8,65,432 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 26,19,72,014 ஆக அதிகரித்துள்ளது.