தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுதேர்வு எப்போது? புதிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுதேர்வு எப்போது? புதிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுதேர்வு எப்போது? புதிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுதேர்வு எப்போது? புதிய அறிவிப்பு வெளியீடு!

12 ஆம் வகுப்பு மொழிப்பாடத்தேர்வினை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை. இந்நிலையில், தேர்வு எழுதாத மாணவர்களுக்கான மறுதேர்வு எப்போது என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

மறுதேர்வு:

தமிழகத்தில் கடந்த மார்ச் 13 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கப்பட்டது. இந்நிலையில், முதல் தேர்வான மொழிப்பாட தேர்விற்கே 49 ஆயிரத்து, 559 மாணவர்கள் வரவில்லை. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 11 ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெறாமல் 12 ஆம் வகுப்பு எழுத இருந்த மாணவர்கள் என கண்டறியப்பட்டது. எனவே, இந்த மாணவர்களுக்கு தேர்வு குறித்தான அச்சத்தை நீக்க வேண்டும் எனவும், பொதுத்தேர்வின் அவசியத்தை உணர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. அச்சத்தில் தமிழக மக்கள் – அமைச்சர் கொடுத்த விளக்கம்!

இந்நிலையில், 12 ஆம் வகுப்பு தேர்வெழுதாத மாணவர்களுக்கு மே மாதம் மறுதேர்வு வைக்க வேண்டும் எனவும், மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் அரசு முக்கியத்துவம் செலுத்த வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் அரவிந்தசாமி, செயலாளர் நிரூபன் சக்கரவர்த்தி ஆகியோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுதேர்வு எப்போது என்பதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!