ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை நிறுத்தி வைக்க வாய்ப்பு – வெளியான முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை நிறுத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வட்டி விகிதம்
இந்தியாவில் வருகிற டிசம்பர் 8 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள நாணயக் கொள்கை குழுவின் இருமாத மறுஆய்வுக் கூட்டத்திற்கு பின், RBI வட்டி விகிதங்களில் அதன் இடைநிறுத்ததை தொடரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த எதிர்பார்ப்பு வலுவானது என்பதால் MPC ஐந்தாவது தொடர்ச்சியான இடைநிறுத்ததை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேலும் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியின் (CBDC) பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ரிசர்வ் வங்கி தனது கொள்கையில் வளர்ச்சி நடவடிக்கைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நாளை (டிச.05) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!
மேலும் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் GDP வளர்ச்சியில் ஏற்பட்ட நேர்மறையான ஆச்சரியம், பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதில் ரிசர்வ் வங்கியின் கவனம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் கடந்த மாதங்களில் பணவீக்கம் அதிகரித்த நிலையில், அதனை கட்டுப்படுத்த இந்த வட்டி விகித நிறுத்தம் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.