ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் – பொருட்கள் வழங்குவதும் சிக்கல்!

0

ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் – பொருட்கள் வழங்குவதும் சிக்கல்!

ரேசன்கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் போராட்டம் நடத்தவுள்ள நிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

ரேஷன் கடை:

ரேஷன் கடைகளில் இலவச ரேஷன் பொருட்களை கள்ள சந்தையில் விற்பனை செய்வது மற்றும் பிற மாநிலங்களுக்கு கடத்துவது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகிறது. அதாவது, கூட்டுறவு ரேஷன் கடைகள் வருவாய்த்துறை நிர்வாகம், டிஎன்சிஎஸ் நிர்வாகம் மற்றும் கூட்டுறவுத் துறை நிர்வாகங்கள் சேர்ந்து கவனிக்கப்படுவதால் சரியான முறையில் ரேஷன் கடைகளை இயக்க முடிவதில்லை. இதனால், கட்டாயமாக பொது விநியோகத் திட்டத்திற்கு என தனித்துறையை உருவாக்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் அவ்வப்போது கோரிக்கை வைத்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல், ரேஷன் கடைகளில் பொதுமக்கள் வாங்காத பொருட்களுக்கும் ரசீது கொடுப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ரேஷன் பொருட்களின் அளவு விலை மற்றும் அதன் கூடுதல் தொகையுடன் கூடிய ரசீது கொடுக்கும் வகையில் 4ஜி சிம் கார்டுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஜூன் 16 தமிழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – கலந்து கொண்டு பயனடையுங்க!

இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த இருப்பதாக முடிவு செய்து இருக்கின்றனர். தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு ரேஷன் கடை ஊழியர்களுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதனால் ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கடைகளையும் ஒரே ஊழியர்களே கவனித்துக் கொள்கின்றன. இந்நிலையில், ஊழியர்கள் போராட்டம் மேற்கொண்டால் குடும்ப அட்டைதாரர்கள் அதிகமாக பாதிப்படைய கூடும். இதனால், ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுமா என்கிற அச்சம் நிலவி இருக்கிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!