விஜய் டிவி பிரபல சீரியலில் இருந்து விலகும் ரக்ஷிதா? புதிய பதிவால் ரசிகர்கள் குழப்பம்!
விஜய் டிவி “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் மஹா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரக்ஷிதா சீரியலை விட்டு விலகி உள்ளாரா என்ற கேள்விக்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து விளக்கமளித்துள்ளார்.
நடிகை ரக்ஷிதா:
விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை ரக்ஷிதா. தமிழ் மட்டுமல்லாமல் கன்னட மொழியில் பல சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் குடும்பப்பாங்கான பெண்ணாக இருப்பதால் அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் மகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், இதுவரைக்கும் இந்த சீரியலில் மாயன் மகா ஜோடி மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்து கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது மாறனின் என்ட்ரியால் கதைக்களமே மாறிவிட்டது.
சன் டிவி “அன்பே வா” சீரியலில் களமிறங்கும் முன்னணி நடிகை – வெளியான புகைப்படம்!!
மாயனும், மாறனையும் ஒன்றாக திரையில் பார்த்த ரசிகர்கள் அண்ணன் தம்பி பாச காட்சிகள் வரும் என எதிர்பார்த்த நிலையில் வாக்குவாதத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. இந்நிலையில் தற்போதைய எபிசோடுகளில் மீண்டும் ரக்ஷிதாவுக்கு நடிப்பை காட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மாறன் மாயனை மிரட்டி உனக்கு இனி நான் தான் எதிரி என்று கூறும்போது மாயனுக்கு சப்போர்ட்டாக மாறனிடம் கெத்தாக பேசும் வசனங்கள் ரக்ஷிதாவின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
இந்நிலையில் அவர் இந்த சீரியலை விட்டு விலக போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தெளிவான அறிவிப்பு எதையும் தெரிவிக்காமல் அவர் இருந்தாலும் இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை அவர் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதில் ரசிகர்கள் நடிப்பீர்களா? மாட்டீங்களா? என தொடர்ந்து கேள்வி கேட்டும் வருகின்றனர். ரக்ஷிதா தற்போது ஒரு வீட்டில் தூணில் சாய்ந்தபடி சில புகைப்படங்களை பதிவிட்டு அதில் கேப்ஷன் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அதே வீடு, அதே தூண், அதே மாடி… எதுவும் மாறவில்லை என்று சோகமான புகைப்படங்களை போட்டிருக்கிறார்.
TN Job “FB Group” Join Now
அதுமட்டுமல்லாமல் நான் எங்கேயும் போகவில்லை இங்கே தான் இருக்கேன்… ஆனா இல்லப்பா! என குறிப்பிட்டு ரசிகர்களை குழப்பி உள்ளார். மேலும் விட்டுட்டு போறாங்க என்று சொல்லி சொல்லியே போக வச்சிருக்கீங்க போலயே! நமக்கு அடி ஒன்னும் புதுசு இல்லையே, பார்ப்போம் என்ன தான் நடக்குனு. சப்போர்ட் பண்ண தான் நீங்க எல்லாம் இருக்கீங்களே எது நடக்கும் என்று பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார். இதற்கு பல ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.