ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வேலை – பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Telephone Operator பணிக்கு என்று காலிப்பணியிடம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Rajiv Gandhi Govt General Hospital, Chennai |
பணியின் பெயர் | Telephone Operator |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Telephone Operator காலிப்பணியிடங்கள்:
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் Telephone Operator பணிக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள அறிவித்துள்ளது.
Join Our TNPSC Coaching Center
Rajiv Gandhi Hospital கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தொலைபேசி இயக்குபவர் பயிற்சி படித்திருக்க வேண்டும்.
Telephone Operator வயது விவரங்கள்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கலாம்.
Rajiv Gandhi Hospital ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் நபர்கள் பணியின் போது மாதம் ரூ.19500/- வரை ஊதிய தொகை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
Telephone Operator தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Rajiv Gandhi Hospital விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பங்களை பெற்று, சரியாக பூர்த்தி செய்து 07.04.2022 ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பித்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.