சரவணனை போலி போலீசிடம் இருந்து காப்பாற்றும் சந்தியா – இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோட்!!

0
சரவணனை போலி போலீசிடம் இருந்து காப்பாற்றும் சந்தியா - இன்றைய 'ராஜா ராணி 2' எபிசோட்!!
சரவணனை போலி போலீசிடம் இருந்து காப்பாற்றும் சந்தியா - இன்றைய 'ராஜா ராணி 2' எபிசோட்!!
சரவணனை போலி போலீசிடம் இருந்து காப்பாற்றும் சந்தியா – இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோட்!!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியாவின் பேராசிரியர் பேசியதை நினைத்து கவலைப்பட வேண்டாம் என சரவணனிடம் சந்தியா சொல்லிக் கொண்டு வருகிறார். பின்னர் போலி போலீசாரிடம் இருந்து சந்தியா புத்திசாலித்தனமாக யோசித்து சரவணனை காப்பாற்றுகிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியாவின் பேராசிரியர் சரவணன் சரியாக படிக்கவில்லை என பேசியதால் சரவணன் வருத்தப்படுவார் என நினைத்துக் கொண்டே வருகிறார். நீங்க எதுவும் வருத்தப்படாதிங்க அவர் எதோ தெரியாமல் பேசிவிட்டார் என சொல்ல, அவர் சரியாக தான சொல்லிருக்கார் என சரவணனன் சொல்கிறார். பின்னர் சந்தியா சரவணன் தோல் மீது கை போட அவரை அங்கையே இறக்கிவிட்டு ஆட்டோ ஏற்றி போக சொல்கிறார்.

மயக்கத்தில் இருக்கும் லட்சுமி அம்மா, மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

பின்னர் சந்தியா ஆட்டோவில் போகும் போது ஒரு படிக்காத பெண் படித்த பையனை திருமணம் செய்தால் எதுவும் சொல்லாத சமூகம், நல்ல படித்த பெண் படிக்காத பையனை திருமணம் செய்தால் மட்டும் ஏன் இப்படி சொல்லணும் என நினைத்துக் கொண்டு வருகிறார். சரவணன் சந்தியாவின் பேராசிரியர் பேசியதை மறைந்து நின்று கேட்டுள்ளார். அதில் உன்னை போன்ற பெண் சிறகு கட்டி பறக்க வேண்டும். இப்படி கூண்டிற்குள் அடைபட்டு இருக்க கூடாது என நினைத்துக் கொண்டு இருக்கிறார்.

அப்போது போலீசார் அவரை மறைத்து லைசன்ஸ் கேட்கிறார். லைசன்ஸ் காட்டிய பின்னர் இன்சூரன்ஸ் முடிந்துவிட்டதை சொல்லி லஞ்சம் கேட்கிறார். சரவணனும் கொடுக்க செல்ல சந்தியா அதை தடுக்கிறார். உடனே அந்த போலீஸ் பயங்கரமாக கோவப்பட்டு கேஸ் போடுவேன் என கஞ்சா பையை எடுத்துவந்து வைக்க சொல்கிறார். இதெல்லாம் பார்த்து சரவணனன் பயப்பட சந்தியா இவர் உண்மையான போலீஸ் இல்லை என்பதை அறிந்து தைரியமாக இருக்கிறார்.

அஞ்சலியின் சீமந்தத்திற்கு வரும் கண்ணம்மா, வெண்பாவின் திட்டம் என்ன? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

சந்தியா தகவலின் படி நிஜ போலீஸ் அங்கே வந்து போலி வேடமிட்டவர்களை கைது செய்கின்றனர். பல நாட்களாக இந்த பகுதியில் இவர்கள் பலரை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். பின்னர் சந்தியாவை எப்படி கண்டுபிடித்தீர்கள் என கேட்க அவர் போலீஸ் உடை சரியாக மாற்றவில்லை என சொல்கிறார். பின்னர் காவல்துறையினர் சந்தியாவை பாராட்டிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்கள். சரவணன் சந்தியா இவ்வளவு அறிவாளியாக இருக்கிறார். அவர் எதிர்காலத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!