மயக்கத்தில் இருக்கும் லட்சுமி அம்மா, மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
மயக்கத்தில் இருக்கும் லட்சுமி அம்மா, மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் குடும்பத்தினர் - இன்றைய
மயக்கத்தில் இருக்கும் லட்சுமி அம்மா, மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் குடும்பத்தினர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
மயக்கத்தில் இருக்கும் லட்சுமி அம்மா, மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், லட்சுமி அம்மா மூச்சு பேச்சு இல்லாமல் படுத்திருக்கிறார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர். பின்னர் கண்ணன் அம்மாவின் நிலைமை பற்றி தெரிந்து மருத்துவமனைக்கு செல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், லட்சுமி அம்மாவை காலையில் எழுப்ப முல்லை வர அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கிறார். உடனே முல்லை சத்தமிட்டு அனைவரையும் அழைக்கிறார். மூர்த்தி முகத்தில் தண்ணி அடித்து எழுப்ப அவர் எந்திரிக்கவில்லை. உடனே காரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கே டாக்டர் பரிசோதனை செய்து பார்த்து எதுவும் பிரச்சனை இல்லை என சொல்கின்றனர்.சரியாக சாப்பிடாமல் இருந்தார்களா என கேட்க, முல்லை ஆமாம் என சொல்கிறார்.

அஞ்சலியின் சீமந்தத்திற்கு வரும் கண்ணம்மா, வெண்பாவின் திட்டம் என்ன? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

3 நாட்களாக வீட்டில் ஒரு பிரச்சனை அதான் சரியாக சாப்பிடாமல் கவலையில் இருந்தார் என சொல்ல,அதான் சுகர் கம்மியாகிவிட்டது என டாக்டர் சொல்கிறார். ஏற்கனவே இதுபோல நடந்திருக்கா என கேட்க ஒருதடவை நடந்துள்ளது என கதிர் சொல்கிறார். இனிமேல் எதுவும் பிரச்சனை இல்லை 2 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவர் சொல்கிறார். மூர்த்தி கடையை கவனிக்க கதிரை அனுப்பி வைக்கிறார்.

பின்னர் கடையில் வேலைபார்க்கும் ஒருவர் கண்ணனை பார்க்கிறார். என்ன இப்படி செய்துவிட்ட என கேட்க வேற வழி இல்லாமல் இப்படி நடந்துவிட்டது என கண்ணன் சொல்கிறார். அண்ணன் கடையில் தான இருக்காங்க என கேட்க, இன்னைக்கு கடை அடைத்து வைத்துள்ளோம் என சொல்கிறார். ஏன் என கேட்க அம்மாக்கு உடம்பு சரியில்லை. நீ சென்றதில் இருந்து அம்மாவிற்கு உடம்பு சரி இல்லை இப்போது மருத்துவமனையில் சேர்த்திருக்கார்கள் என சொல்கிறார்.

இப்போ அம்மாவிற்கு எதுவும் இல்லையே என சொல்ல ஜீவா போன் செய்த போது எதுவும் இல்லை என்று தான் சொன்னார். ஆனால் குரல் ஒரு மாதிரி இருந்தது என சொல்கிறார். அதை கேட்டு கண்ணன் நான் சென்று பார்க்கிறேன் என சொல்கிறார். நீ போக வேண்டாம் அங்கே உன் அண்ணன் இருப்பார் என சொல்ல, அதெல்லாம் இல்லை நான் சென்று பார்க்கிறேன் என கிளம்புகிறார்.

சீரியல் நடிகரின் புதிய ப்ரோமோஷன் – மனைவியுடன் எடுத்த அழகிய போட்டோ ஷுட்!

பின்னர் மருத்துவமனைக்கு மீனா சாப்பாடு கொண்டு வர லட்சுமி அம்மாவை அழைக்கிறார். அவர் கண் திறந்து பார்த்து கயல் எங்கே என கேட்கிறார். பின்னர் மூர்த்தி அங்கிருந்து கிளம்ப மீனாவிற்கு துணையாக ஜீவாவை இருக்க சொல்கிறார். சரி என்று மூர்த்தியை அனுப்பி வைக்க வெளியே வருகின்றனர். அப்போது கண்ணன் அழுது கொண்டே வருகிறார். அவரை பார்த்து மூர்த்தி கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!