சிவகாமியை நினைத்து பயப்படும் குடும்பத்தினர், புதிய கருவியை பயன்படுத்தி சப்பாத்தி செய்யும் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2 ” சீரியலில், சந்தியா சர்க்கரை மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து சப்பாத்தி செய்ய புதிதாக ஒரு கருவியை பயன்படுத்துகிறார். பின் சிவகாமியை நினைத்து வருத்தமாக இருக்கிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியா சர்க்கரை மாமா மற்றும் மயிலை அழைத்து விளையாட்டு ஒன்று விளையாடலாமா என கேட்கிறார். பின் என்ன விளையாட்டு என கேட்க சப்பாத்தி விளையாட்டு என சந்தியா சொல்கிறார். பின் சந்தியா ரூமிற்கு சென்று ஒன்றை எடுத்து வருகிறேன் நீங்க சமையலறை போங்க என சொல்கிறார். மறுபக்கம் அர்ச்சனா கடையில் இருக்க குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என செந்தில் கேட்கிறார். எனக்கு தோன்றும்போது தான் பெற்றுக் கொள்வேன் என அர்ச்சனா சொல்கிறார்.
மறுபக்கம் அர்ச்சனாவை பார்க்க மாப்பிள்ளையின் அம்மா வருகிறார். உங்க தங்கச்சியை பார்க்க உங்க வீட்டிற்கு சென்றதாக சொல்ல, அத்தை தப்பாக சொல்லிருப்பார் என அர்ச்சனா நினைக்கிறார். ஆனால் அர்ச்சனா அவளுக்கு ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்துவிட்டதாக சொல்கிறார். பின் கோவிலில் சிவகாமி அர்ச்சனாவின் அம்மா மற்றும் தங்கையை பார்க்கிறார். அவர் உங்களுக்கு உடம்பு சரியாகிவிட்டதா என கேட்க எனக்கு ஒன்றுமில்லை என அர்ச்சனா அம்மா சொல்கிறார்.
ராதிகாவிடம் உண்மையை சொல்ல போகும் ராமமூர்த்தி, பயத்தில் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
அப்போது உங்களை பார்க்க தான் அர்ச்சனா அடிக்கடி வருவார் என கேட்க, அர்ச்சனாவின் தங்கச்சி ஆமாம் என சொல்கிறார். சீக்கிரமாக கல்யாணம் ஆகும் அர்ச்சனாவிற்கும் குழந்தை பிறக்கும் என சிவகாமி சொல்கிறார். மறுபக்கம் சந்தியா சப்பாத்தி செய்யும் கருவி ஒன்றை கொண்டு வருகிறார். அதை பார்த்து சர்க்கரை மற்றும் மயில் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இது என் திருமணத்திற்கு வந்தது, இப்போது தான் பயன்படுத்துகிறேன் என சொல்ல, அவர் அதில் மாவு போட்டு காட்டுகிறார். அதுவே எல்லாம் செய்துவிட அந்த நேரம் கதவை தட்டும் சத்தம் கேட்கிறது.
உடனே சந்தியா பதட்டம் அடைய சரவணனின் குரல் கேட்கிறது. சந்தியா சர்க்கரையை அனுப்பி சரவணனை உள்ளே விடாமல் பார்த்துக் கொள்ள சொல்கிறார். சர்க்கரை சென்று சரவணனை சமாளிக்க சந்தியா வந்து உள்ளே விடாமல் செய்து அவரை அனுப்பிக்கிறார். பின் சிவகாமி வர சத்தம் கேட்க, அனைவரையும் சென்று ஒளிந்துக் கொள்ள சொல்கிறார் சந்தியா. சிவகாமி நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காமல் இருக்கிறார். உடனே சந்தியா பதட்டமாக இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.