விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் சிவகாமி சபதம் – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
விஜய் டிவியில் வரும் சீரியலில் தற்போதைய நிலவரப்படி மிகவும் பரபரப்பாக வரும் சீரியல் என்றால் அது ராஜா ராணி 2 தான். அர்ச்சனாவை பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்ட பின்னர் சிவகாமி எடுக்கும் அதிரடியான முடிவு குறித்த காட்சிகள் வர உள்ளது.
சிவகாமியின் சபதம்:
விஜய் டிவியின் ஆஸ்தான இயக்குனரான பிரவீன் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் தற்போது அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. சிறிது நாட்கள் முன்னர் வரை சரவணன் சமையல் போட்டியில் கலந்து கொள்வது போன்ற காட்சிகள் வந்தது. அதில், அவர் வெற்றி பெற்ற பரிசு பணத்தை வைத்து சில நாட்கள் கதை சென்றது.
ஆதார் கார்டு வைத்துள்ளோர் கவனத்திற்கு – தவறாக பயன்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம்!
தற்போது அந்த கதை முடிந்து அர்ச்சனாவின் சேட்டைகள் அதிகரித்து வந்தது. தான் கர்ப்பமாக இருப்பதாய் அறிந்து அதை கலைக்க செந்திலிடம் சம்மதம் வாங்க குற்றாலம் கூட்டி செல்கிறார். ஆனால் அங்கு ஒரு மோசமான தங்கும் விடுதியில் ரூம் எடுத்து தங்குகிறார்கள். எதிர்பாராத விதமாக அங்கு போலீஸ் வந்து இவர்களை தவறாக நினைத்து ஸ்டேஷனிற்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு இவர்கள் கணவன்,மனைவி தான் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பெரிய பிரச்சனை நடக்கிறது.
இன்னொரு புறம், சிவகாமியை போலீசில் புகார் அளித்து கைது செய்ய வைத்தது அர்ச்சனா தான் என்று சந்தியா கண்டுபிடிக்கிறார். அதை தன் தங்கை ப்ரியாவை வைத்து தான் அர்ச்சனா செய்துள்ளார் என்பதை அறிந்து கொள்கிறார். இதனை அர்ச்சனாவின் அம்மாவே வந்து சிவகாமியிடம் சொல்லி விடுகிறார். இதனால் அர்ச்சனாவை பற்றிய அனைத்து உண்மைகளும் சிவகாமிக்கு தெரிந்து விடுகிறது. இதனால் அடுத்து சிவகாமி என்ன முடிவெடுப்பார் என்று அனைவரும் ஆர்வம் பொங்க காத்திருக்கின்றனர்.