விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சமையல் போட்டியில் இருந்து வெளியேறும் சரவணன் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் கோவிலுக்கு காப்பு கட்டி இருப்பதால் சரவணனை சிக்கன் சமைக்க கூடாது என சிவகாமி சொல்கிறார். அதனால் சந்தியா சிக்கன் போலவே இருக்கும் வேறு ஒன்றை கண்டுபிடித்து சொல்கிறார். ஆனால் போட்டியின் இறுதியில் சரவணன் உண்மையை நடுவரிடம் சொல்லி விடுகிறார்.
ராஜா ராணி 2:
இன்றைய “ராஜா ராணி 2” எபிசோடில் சரவணன் பல கஷ்டங்களை தாண்டி அரை இறுதி போட்டிக்கு வருகிறார். அப்போது சரவணனை சிக்கன் சமைக்க வேண்டும் என சொல்கின்றனர். ஆனால் கோவிலில் காப்பு கட்டி இருப்பதால் அசைவம் சாப்பிட கூடாது என சிவகாமி சொல்கிறார். அதனால் என்ன செய்வது என தெரியாமல் சரவணன் போட்டியில் விளையாடவில்லை என சொல்லி ஊருக்கு கிளம்புகின்றனர். அப்போது சந்தியா சிக்கன் போலவே சுவை கொண்ட வேறு ஒரு பொருளை கண்டுபிடித்து சொல்கிறார்.
செம்பருத்தி ஷபானா & ஆர்யன் இணைந்து நடிக்கும் “மாப்ள சிங்கம்” சீரியல் – ப்ரோமோ வெளியீடு!
அதில் சமைத்தால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது என சொல்ல, ஆனால் பொய் சொல்லி போட்டியில் வெற்றி பெற வேண்டாம் என சரவணன் சொல்கிறார். ஆனால் சந்தியா வற்புறுத்தி சரவணனை போட்டியில் கலந்து கொள்ள வைக்கிறார். சரவணன் சமைத்து முடிக்க நடுவர்கள் சாப்பிட்டு பார்த்து அருமையாக இருப்பதாக சொல்கிறார்கள். உடனே சரவணன் வாய்யை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், இது சிக்கன் இல்லை என்ற உண்மையை சொல்கிறார்.
மனைவியை விவாகரத்து செய்த இசையமைப்பாளர் D இமான் – என்ன காரணம்? ரசிகர்கள் ஷாக்!
இதுவரை நடந்த பிரச்சனை எல்லாம் அர்ச்சனா மற்றும் சல்மாவால் தான் வந்தது. ஆனால் இந்த பிரச்சனைக்கு சரவணன் மட்டுமே காரணம் சமைக்கும் வரை உண்மையை சொல்லாத சரவணன் திடீரென ஏன் உண்மையை சொன்னார் என ரசிகர்களுக்கு கேள்வி எழுந்துள்ளது. சரவணன் இந்த போட்டியை விட்டு போக வேண்டும் என நடுவர்களும் சக போட்டியாளர்களும் சொல்லி வருகின்றனர். அப்போ சரவணன் தோற்க போகிறாரா என அடுத்து வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.