அதிகரித்து கொண்டே வரும் ஆன்லைன் பண மோசடி – SBI எச்சரிக்கை!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் பணம் மோசடி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது குறித்த எச்சரிக்கை அறிவிப்பை SBI வங்கி வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் மோசடி:
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் பல இடங்களில் பண மோசடி அதிகமாக நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னையில் ATM-களில் நூதன முறையில் பணம் திருடியது கடந்த மாதம் முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேரடியாக வந்து வரி வசூல் செய்யப்படும் – திருப்பூர் மாநகராட்சி!!
இந்நிலையில் SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் சமீப காலமாக ஒரு தனி நபர் மொபைல் எண்ணில் இருந்து KYC சம்மந்தமாக உங்களது வங்கி கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது எனவும் KYC தகவல்களை பூர்த்தி செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்ய வேண்டும் என குறுந்செய்தி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த குறுந்செய்தி வங்கியில் இருந்து வந்திருப்பதாக நம்பி லிங்கை கிளிக் செய்து தங்களுடைய வங்கி கணக்கு குறித்த தகவல்களை தெரிவித்த பின்னர் அவர்களது வங்கி கணக்கில் உள்ள பணம் பறிபோகிறது. இந்நிலையில் இந்த பணம் மோசடோ உண்மையானது எனவும் நாடு முழுவதும் இவ்வாறு பணம் திருடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வங்கி தரப்பில் இது போல எந்த லிங்கும் அனுப்பப்படவில்லை என தெரிவித்துள்ளது. மேலும் இதுபோல மோசடி நடந்தால் cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் தெரிவிக்கலாம் எனவும் மின்னஞ்சல் மூலமாக மோசடி செய்ய நினைத்தால் [email protected]. எனும் முகவரியில் புகார் தெரிவிக்கலாம்.