தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு – காலாண்டு விடுமுறை நீடிப்பா? எதிர்பார்ப்பில் மாணவர்கள்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் விடுமுறை நீடிக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
காலாண்டு விடுமுறை:
தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 23ம் தேதியுடன் காலாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 4 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் 28ஆம் தேதியிலிருந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டு அக்டோபர் 9ம் தேதி வகுப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SPMCIL நிறுவனத்தில் ரூ.1,03,000/- ஊதியத்தில் வேலை – Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ஆனால், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகல்வித்துறை முன்பே அறிவித்தபடி இன்றுடன் காலாண்டு விடுமுறை முடிவடைந்து நாளை வகுப்புகள் துவங்க இருக்கிறது. இந்நிலையில், ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டதை போல 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விடுமுறை நீட்டிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் எனவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.