தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு – காலாண்டு விடுமுறை நீடிப்பா? எதிர்பார்ப்பில் மாணவர்கள்!

0
தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு - காலாண்டு விடுமுறை நீடிப்பா? எதிர்பார்ப்பில் மாணவர்கள்!
தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு - காலாண்டு விடுமுறை நீடிப்பா? எதிர்பார்ப்பில் மாணவர்கள்!
தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு – காலாண்டு விடுமுறை நீடிப்பா? எதிர்பார்ப்பில் மாணவர்கள்!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் விடுமுறை நீடிக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

காலாண்டு விடுமுறை:

தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 23ம் தேதியுடன் காலாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 4 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் 28ஆம் தேதியிலிருந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டு அக்டோபர் 9ம் தேதி வகுப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SPMCIL நிறுவனத்தில் ரூ.1,03,000/- ஊதியத்தில் வேலை – Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஆனால், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகல்வித்துறை முன்பே அறிவித்தபடி இன்றுடன் காலாண்டு விடுமுறை முடிவடைந்து நாளை வகுப்புகள் துவங்க இருக்கிறது. இந்நிலையில், ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டதை போல 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விடுமுறை நீட்டிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் எனவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!