பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் மற்றும் புதுவையில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் பள்ளிகள் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னதாகவே மருத்துவ நிபுணர்கள் இந்தியாவில் கொரோனா 3ம் அலை அக்டோபர் மாதத்தில் தாக்கும் என்றும், தொற்றினால் இந்த முறை குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்திருந்தனர். இருப்பினும், தீவிர பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – தலைமை செயலர் ஆலோசனை!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைப்பது தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்த இறுதி முடிவை முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு முன்னதாக வெளியிட்டுள்ளது. தற்போது, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர், நாட்டில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவடையவில்லை என்பதால் மாநில அரசுகள் பள்ளிகளைத் திறப்பதில் நிதானம் காட்ட வேண்டும் என்றார்.
TN Job “FB Group” Join Now
மருத்துவரின் அறிவிப்பால் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். மாணவர்கள் ஒரே வகுப்பறையில் கூடும்போதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது என்பது கடினமான காரியம் என்றும், அவர்களுக்கு தடுப்பூசியே போடாமல் பள்ளிகள் திறப்பது ஆபத்தில் முடியலாம் எனவும் கூறினார். மேலும், புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் விவாதத்தில் எம்எல்ஏ பி.ஆர்.சிவா, பள்ளிகள் திறப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய திமுக எம்எல்ஏ நாஜிம், பள்ளிகள் திறப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். அதில் எடுக்கும் முடிவை புதுச்சேரியிலும் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.