ஜூன் 10 வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!!
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள போதிலும், முழு ஊரடங்கை நீடித்தும், சில தளர்வுகளை அறிவித்தும் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக நேற்று மட்டும் பஞ்சாப் மாநிலத்தில் 4,124 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 5,52,235 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 186 பேர் நேற்று உயிரிழந்துள்ள நிலையில், 13,827 பேர் இதுவரை மாநிலத்தில் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். மாநிலத்திலேயே லூதியானாவில் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்தின் தொற்று நேர்மறை விகிதம் 5.44% ஆக உள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் மாநிலத்தில் மே 31 ம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மாநிலத்தின் உயிரிழப்பும், நோய் பாதிப்பும் அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க முடிவு செய்திருப்பதாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் ஜூன் 10ம் தேதி முழு ஊரடங்கு பஞ்சாப் மாநிலத்தில் அமலுக்கு வருகிறது. ஆனால் சில தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்திற்கு 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு – மத்திய அரசு தகவல்!
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
- மாநிலத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும், ஆனால் அரசு பள்ளிகளின் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்கள் அனைவரும் பணிக்கு செல்ல வேண்டும். மேலும், அனைத்து வகையான பணியாளர் தேர்வுகளும் தள்ளிவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரே வீட்டில் வசிப்பவர்கள் தவிர ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாக பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் அனைத்து கடைகளும் மூடப்படும்.
- மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களான பால், ரொட்டி, காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் முட்டை, இறைச்சி, மொபைல் பழுது போன்ற கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.