கொரோனா தொற்று எதிரொலி – அங்கன்வாடிகளை மூட உத்தரவு!!
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள அங்கன்வாடி மையங்களை மூடுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. குழந்தைகளின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கல்வித்துறை உத்தரவு:
கொரோனா நோய்ப்பரவல் அச்சம் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. பின்னர் தொற்று குறைந்ததால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. மேலும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கல்வி நிறுவனங்களை திறக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. தற்போது பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்தும் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ள நிலையில் சில மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கி உள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் அவசியம் – ஏஐசிடிஇ அறிவிப்பு!!
இதனால் அந்தந்த மாநில அரசுகள் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தி வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் காரணத்தால் சில மாவட்டங்களில் மீண்டும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனையடுத்து பள்ளிகளை மூட கல்வித்துறை உத்தரவிட்டு இருந்த நிலையில், தற்போது அங்கன்வாடி மையங்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பான உத்தரவினை அம்மாநில சமூக பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் பிறப்பித்து உள்ளார். மேலும் குழந்தைகளுக்கான ரேஷன் மற்றும் பிற இலவச பொருட்கள் அவரவர் வீடுகளுக்கே அங்கன்வாடி தொழிலாளர்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அடிக்கடி கைகளை சுத்தம் செய்து, சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்