பிங்க் நிற பஞ்சுமிட்டாய்க்கு தடை.. புற்றுநோய் அபாயம் – ஷாக் நியூஸ்!

0
பிங்க் நிற பஞ்சுமிட்டாய்க்கு தடை.. புற்றுநோய் அபாயம் - ஷாக் நியூஸ்!

புதுச்சேரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் மறு உத்தரவு வரும் வரை பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை அறிவிப்பு

புதுச்சேரியில் கடந்த சில மாதமாக வட மாநில இளைஞர்கள் 30க்கு மேற்பட்டவர்கள் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பஞ்சுமிட்டாயை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ரோஸ் கலர் பஞ்சு மிட்டாயில் ரோடமின் பி(RHODAMINE-B) என்ற விஷ நிறமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலை விஷ நிறமி ஆகும்.

மாநில தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பம் – முழு விவரம் உள்ளே!

இது குறித்து இதுவரை 20 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அதனால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் மறு உத்தரவு வரும் வரை பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு விசாரணை நடத்தப்பட்டு உரிய லைசன்ஸ் வழங்கப்பட்ட பின் விற்பனை தொடங்கலாம் எனவும், பொதுமக்கள் இது குறித்து பீதி அடைய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!