அரசு பள்ளி மாணவர்களுக்கு புது அப்டேட் – வெளியான அறிவிப்பு!
புதுச்சேரியில் உள்ள 300 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாலையில் அவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
புதுச்சேரியில் அரசு சார்பில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவை அரசு வழங்கியது. இந்நிலையில் மதிய உணவு வழங்க மத்திய சமையல் கூடங்கள் நிறுவப்பட்டுள்ளது. இதற்காக 2018 முதல் அட்சய பாத்திரம் என்ற நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து நவீன சமையல் கூடத்தில் மதிய உணவு தயாரிக்கப்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை விப்ரோ கம்பெனியில் காத்திருக்கும் சூப்பர் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பால் மற்றும் வாரத்திற்கு 3 முட்டையும் வழங்கப்படுகிறது. இதை தொடர்ந்து மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்தது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். இது பற்றி அமைச்சர் நமசிவாயம் கூறுகையில், கவர்னர் ஒப்புதலை தொடர்ந்து டெண்டர் கோரி இருப்பதாகவும், ஜனவரி மாதம் இறுதியில் குடியரசு தினத்தில் சிறுதானிய பிஸ்கட் வழங்கும் திட்டத்தை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.