ஜூலை 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!
புதுச்சேரியில் கொரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவானது ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பாதிப்பு நிலவரத்திற்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. புதுச்சேரியில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கில் தற்போது கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி தினசரி 10 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய விமானங்களுக்கு ஜூலை 21 வரை தடை நீட்டிப்பு – கனடா அரசு அறிவிப்பு!
மேலும் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் தினசரி காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை செயல்படலாம். அரசு, தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே அறிவித்தபடி தொடர்ந்து இயங்கலாம். அரசியல், சமூக நிகழ்வுகள், பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு தடை தொடரும். இருப்பினும் காய்கறி, பழக்கடைகள் காலை 5 மணிமுதல் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. சில்லரை மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் இரவு 9 மணிவரை செயல்படலாம். உணவகங்கள், தங்கும் விடுதிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி உண்டு.
TN Job “FB Group” Join Now
அனைத்து வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், கடற்கரை சாலைகளில் இரவு 9 மணிவரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சுற்றுலா தலங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இத்தகைய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.