இந்திய விமானங்களுக்கு ஜூலை 21 வரை தடை நீட்டிப்பு – கனடா அரசு அறிவிப்பு!
கொரோனா பரவல் காரணமாக கனடா அரசு இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வரும் ஜூலை 21 வரை நீட்டித்துள்ளது. மேலும் பிற நாடுகளில் இருந்து கனடா வரும் இந்திய பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானத்திற்கு தடை:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த வருடம் முதல் தீவிரமாக பரவி வருகிறது. அரசு தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகிறது. மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல், கிருமி நாசினிகளை பயன்படுத்துதல், முகக்கவசம் அணிதல் மூலம் தொற்றை கட்டுப்படுத்தலாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கடந்த வரும் இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதல் அலையில் தப்பித்த இந்தியா இரண்டாம் அலையில் சிக்கிக் கொண்டது.
இந்தியர்களின் 20 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம் – ஒரே மாதத்தில் அதிரடி நடவடிக்கை!
இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு இந்தியாவில் தான் அதிகம் உள்ளது என உலக சுகாதாரத்துறை தெரிவித்தது. நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மீண்டும் மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்தது. கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா உச்சம் தொட்ட காரணத்தால் பல்வேறு நாடுகள் இந்திய பயணிகள் விமானத்திற்கு தடை விதித்தது. இந்திய பயணிகள் மூலம் நோய் பரவும் வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசுகள் தெரிவித்தது.
TN Job “FB Group” Join Now
மற்ற நாடுகளை தொடர்ந்து கனடாவில் கொரோனா பரவல் காரணமாக இந்திய விமானங்களுக்கு கடந்த மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. தற்போது ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை வரும் ஜூலை 21 வரை நீட்டித்துள்ளது. மேலும் பிற நாடுகளில் இருந்து கனடா வரும் இந்திய பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும், ஜம்மு காஷ்மீர் பகுதிகளுக்கும் கனடா நாட்டு மக்கள் பயணம் செய்ய வேண்டாம் என்று கனடா அரசு தன் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.