12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிகள் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!

0
12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிகள் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிகள் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!
12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிகள் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!
12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிகள் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!

புதுச்சேரியில் அரசு தெரிவித்த கட்டுப்பாடுகள் மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பள்ளிகளுக்கான அறிவிப்பு:

புதுச்சேரியில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றி கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் முதற்கட்டமாக உயர்நிலை வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் பின்னர் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் செயல்பட தொடங்கியது.

TN Job “FB  Group” Join Now

தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சில பள்ளிகள் புதுச்சேரி அரசின் உத்தரவினை மீறி செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் அ.மைக்கேல் பெனோ கூறுகையில், “கொரோனா பரவல் காரணமாக புதுவையில் தமிழக பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கல் – RBI கவர்னர் தகவல்!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்படலாம். அதே போல சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தக் கூடாது. 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு காரணமாக வகுப்புகள் நடத்தப்படலாம். அவர்கள் பெற்றோர்களிடம் அனுமதி கடிதம் பெற்றால் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும். மேலும் வருகைப் பதிவேடும் கட்டாயமில்லை.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 6 காஸ் சிலிண்டர், வாஷிங்மெஷின் இலவசம் – முதல்வர் வாக்குறுதி!!

மேலும் வகுப்புகளில் மாணவர்கள் கொரோனா விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். விதிமீறலில் ஈடுபடும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து எதாவது புகார் இருந்தால் பெற்றோர்கள் தெரிவிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!