கல்லூரி மாணவர்களுக்கு 6 நாட்கள் விடுமுறை – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
புதுச்சேரியில் கொரோனா காரணமாக கல்லூரிகள் 6 நாட்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
கல்லூரிகளுக்கு விடுமுறை:
நாடு முழுவதும் கொரோனா பரவல் பரவி வருகிறது ஒரே நாளில் கொரோனா தாக்கம் 16000க்கு மேல் பரவி வருகிறது. புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகாமாக பரவி வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமலும் உள்ளனர். இதனால் கொரோனா பரவல் அதிகம் பரவ வாய்ப்புகள் உள்ளது. இதனால் புதுச்சேரி கல்லூரிகளுக்கு தற்போது 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு ஆன்லைன் மூலமாக மட்டுமே பாடங்கள் நடத்தபட வேண்டும் என துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பயிற்சி வகுப்புகள் – தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு!!
ஆனால் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை மட்டுமே நேரடி வகுப்புகள் மூலமாக நடத்த துணைநிலை ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருவதால் மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.