தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பயிற்சி வகுப்புகள் – தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற உள்ளதால், சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
செய்முறை பொதுத்தேர்வுகள்:
தமிழகத்தில் பள்ளிகள் கொரோனா காரணமாக மூடப்பட்டு 10 மாதங்களுக்கு பின்னர் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியும் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டு 2மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வந்தது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. இருந்த போதிலும் பள்ளிகளில் தேர்வுகள் இல்லாத போதிலும் மாணவர்களுக்கு அடிப்படை கல்வி தேவை என்ற நோக்கில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன. ஆனால் கொரோனா தாக்கம் பள்ளிகளில் அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் – இன்று 1779 பேருக்கு தொற்று உறுதி!!
ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு வரும். மேலும் அவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்கிடையில் ஏப்ரல் 16 ஆம் தேதி செய்முறை பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடத்தப்பட உள்ளதால் அதற்கு பின் செய்முறை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகளவு கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!
மேலும் இந்த தேர்வுகள் சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டும் எனவும், அகமதிப்பீடு மதிப்பெண்கள் குறித்த பட்டியல் தயார் செய்து ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் முக்கியமான பாடங்களுக்கான செய்முறை தேர்வுக்கு கால அட்டவணையில் தேதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஆனால் தற்போது நடப்பு கல்வியாண்டில் காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்ட காரணத்தால் பாடத்திட்டங்களை முடிக்கவும், செய்முறை தேர்வுகளுக்கான முக்கியத்தும் அளிக்க முடியாது எனவே சட்டமன்ற தேர்தலுக்கான பின்னர் இதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.