தமிழகத்தில் அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் – சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் இந்த காய்ச்சல் சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இன்ஃப்ளூயன்சா காய்ச்சல்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமானோர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்துள்ளதாவது, ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி லேசான காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் இருப்பவர்கள் A வகை எனவும், தீவிர காய்ச்சல், அதிக இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் இருப்பவர்கள் B வகை எனவும், தீவிர காய்ச்சல், தொண்டை வலி ஆகியவற்றோடு மூச்சுவிடுவதில் சிரமம், இரத்த அழுத்த குறைவு, நெஞ்சுவலி உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகளுடன் இருப்பவர்கள் C வகை எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் C வகையினர் கட்டாயமாக RT PCR பரிசோதனை மேற்கொள்வதுடன், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
LIC AAO Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!
அத்துடன் சாதாரண காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் வீட்டில் தங்களை 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணிதல், கை கழுவுதல், மருத்துவரை அணுகி மருந்துகளை உண்ணுதல், அதிகம் தண்ணீர் குடித்தல் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கர்ப்பிணிகள் மற்றும் இணைநோய் உள்ளவர்கள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் ப்ளூ தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தியுள்ளது.