தமிழகத்தில் மகா சிவராத்திரி அன்று பொது விடுமுறை – முதல்வருடன் ஆலோசனை !!

0
தமிழகத்தில் மகா சிவராத்திரி அன்று பொது விடுமுறை - முதல்வருடன் ஆலோசனை !!
தமிழகத்தில் மகா சிவராத்திரி அன்று பொது விடுமுறை - முதல்வருடன் ஆலோசனை !!
தமிழகத்தில் மகா சிவராத்திரி அன்று பொது விடுமுறை – முதல்வருடன் ஆலோசனை !!

தமிழகத்தில் மகா சிவராத்திரிக்கு பொது விடுமுறை அளிப்பது குறித்து முதல்வருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் கோயில் புனரமைப்பு பணிகளை தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

பொது விடுமுறை :

தமிழகத்தில் மகா சிவராத்திரி மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிவராத்திரி நாளில் மக்கள் தங்கள் குல தெய்வங்களை வழிபட தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்வர். மேலும் சிவனை இரவு முழுவதும் கண்விழித்து வணங்குவர். அன்றைய தினம் சிவனுக்கு ஏராளமான பூஜைகள் நடைபெறும். அனைத்து சிவன் கோயில்களிலும் இரவு முழுவதும் சிவனுக்கு பக்தர்கள் வழிபாடு செய்வர். சிவராத்திரி நாளில் தான் சிவன் முதலில் ஒரு லிங்க வடிவில் தன்னை வெளிப்படுத்தினான் என புராண கதைகள் கூறுகிறது.

சென்னையில் ஜூலை 15ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – பொதுமக்கள் கவனத்திற்கு!!

இந்த நாளில் சிவபெருமானை வணங்குவது ஒருவருக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் அளிக்கிறது என கூறப்படுகிறது. இந்த புனிதமான நாளான மகா சிவராத்திரி அன்று தமிழகத்தில் பொது விடுமுறை அளிப்பது குறித்து முதல்வருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.மேலும் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அரண்மனையை புனரமைத்து, பாதுகாக்கும் பணியை இந்து அறநிலையத்துறை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் 30 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவைகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவக் குழுவினரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உணவு வகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கிய பல கோயில்கள் தற்போது இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன எனவும் இக்கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்ள நல்ல சூழலை ஏற்படுத்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் எனவும் அமைச்சர் பி.கே. சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!