‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அண்ணன், தம்பிகளை பார்த்து ஆச்சர்யப்படும் கோதை – மெகா சங்கமம் ப்ரோமோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல்களின் மெகா சங்கமம் நடைபெற்று வரும் நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் பாசப் பிணைப்புகளை பார்த்து கோதை ஆச்சரியப்படுவது போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
சீரியல் ப்ரோமோ
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘தமிழும் சரஸ்வதியும்’ தற்போது மெகா சங்கமத்தில் இணைந்துள்ளது. அதாவது சென்னையை சுற்றி பார்ப்பதற்காக காரைக்குடியில் இருந்து கிளம்பி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தமிழ் குடும்பத்துடன் இணைவது போல புதிய கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது இந்த சிறப்பு எபிசோடுகளுக்கான புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
26 லட்சம் கட்டினால் 1,80,000 ரூபாய் – நடிகை சினேகாவை ஏமாற்றிய பிரபல நிறுவனம்!
அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் அண்ணன், தம்பிகளின் பாச பிணைப்பை பார்த்து கோதை ஆச்சரியப்படுவது போல அடுத்தகட்ட கதைக்களம் வெளியாக இருக்கிறது. அதாவது, சென்னைக்கு வரும் வரை உட்கார்ந்து கொண்டே நெடுநேரம் பயணித்ததால் மூர்த்தி தனக்கு கால் வலிக்கிறது என கூறுகிறார். இந்த கால் வலியை போக்குவதற்காக ஜீவா மற்றும் கதிர் இருவரும் மூர்த்தியின் காலை பிடித்து விடுகின்றனர்.
அப்போது, உங்களுக்கு திருமணம் ஆகி விட்டது உங்கள் மனைவிகள் இதை பார்த்தால் என்ன சொல்லுவார்கள் என மூர்த்தி கேட்க, உங்க தம்பிகள் உங்க காலை பிடித்து விடுவதற்கு நாங்கள் தப்புனு சொல்ல போகிறோமா என முல்லை சொல்கிறார். இதை எதேச்சையாக பார்க்கும் கோதை அண்ணன் தம்பிகளின் பாசத்தை கண்டு வியக்கிறார். பிறகு ஜீவா மற்றும் கதிர் இருவரும் தங்களிடம் இருக்கும் பணத்தை கொடுத்து வந்து மூர்த்தியிடம் கொடுக்கிறார்கள்.
மகாசங்கமத்தில் கண்ணனுக்கு லீவு விட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
இதை கவனிக்கும் கோதையும் அவரது கணவரும், பண விஷயத்தில் இப்படி இருப்பது நல்லது என சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் எல்லாரும் கூட்டு குடும்பம், எங்களுக்கு அண்ணனின் சொல் தான் எங்களுக்கு வேதவாக்கு என கதிர் சொல்கிறார். இதனை கேட்டு கோதை, உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கிறது என சொல்கிறவாறு புதிய ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.