26 லட்சம் கட்டினால் 1,80,000 ரூபாய் – நடிகை சினேகாவை ஏமாற்றிய பிரபல நிறுவனம்!
பிரபல சிமெண்ட் தொழிலதிபர்கள் அதிக வட்டி தருவதாக கூறி தன்னை ஏமாற்றியதோடு மிரட்டி இருக்கின்றனர் என்று பிரபல தமிழ் நடிகை சினேகா கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார்.
நடிகை புகார்
தற்போதைய காலகட்டத்தில் பலரும் பணத்தினை சேமிக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். பொது மக்களின் இந்த எண்ணத்தினை புரிந்து கொள்ளும் பிரபல நிறுவனங்கள் சேமிக்கும் பணத்திற்கு அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியும் விடுகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை சினேகா இதனால் பாதிப்படைந்துள்ளார். அவர் கானாத்தூர் காவல் நிலையில் புகார் ஒன்றினை அளித்துள்ளார். அதில் கவுரி சிமெண்ட் & மினரல் நிறுவனத்தின் உரிமையாளர்களான சந்தியா, சிவராஜ் மற்றும் கவுரி ஆகிய மூவரும் சினேகாவிடம் ஒரு சேமிப்பு திட்டம் இருப்பதாக கூறியுள்ளனர்.
மகாசங்கமத்தில் கண்ணனுக்கு லீவு விட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
அதன்படி 26 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 1,80,000 ரூபாய் கிடைக்கும் என்று கூறி உள்ளனர். இதனை நம்பி இருக்கும் நடிகை சினேகா அவர்களது நிறுவனத்தில் 26 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். முதலில், 25 லட்சத்தினை ஆன்லைன் மூலமாகவும், மீதம் இருந்த 1 லட்சத்தினை ஈச்சம்பாக்கம் அருகில் உள்ள ஒரு வீட்டில் வைத்து வழங்கி உள்ளார். கவுரி நிறுவனத்தின் உரிமையாளர்கள் தன்னிடம் நம்பிக்கை தரும் விதத்தில் பேசியதால் தான், அவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்திருந்ததாக நடிகை சினேகா தெரிவித்துள்ளார்.
பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளிய ‘பாக்கியலட்சுமி’ சீரியல் – TRP ரேட்டிங் வெளியீடு!
அவர்கள் கூறியது போலவே 26 லட்சத்தினை முதலீடு செய்த நடிகை சினேகா வட்டி தொகையினை ஒரு மாதத்திற்கு பிறகு அவர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் பணத்தினை தர முடியாது என்று மறுத்ததோடு மட்டுமல்லாமல், நடிகை சினேகாவை மிரட்டியும் உள்ளனர். இதனை தொடர்ந்து தான் அவர் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பணமோசடி தொடர்பாக கவுரி சிமெண்ட் & மினரல் நிறுவனத்தின் மீது நடிகை அளித்துள்ள புகாரினை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.