தமிழகத்தில் சுங்க கட்டணம் உயர்வு – இன்று முதல் அமல்! கிளம்பும் எதிர்ப்பு!
தமிழகத்தில் நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டுநர்களிடம் இருந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணமானது இன்று முதல் உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுங்கக்கட்டணம் உயர்வு
தமிழகத்தில் 50 சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டுநர்களிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2 முறை உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான சுங்க கட்டணம் கடந்த ஏப்ரல் மாதம் மாதம் உயர்த்தப்பட்டது. ஏற்கனவே பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து தவித்து வரும் வேளையில் சுங்கக்கட்டணம் உயர்வு பொருளாதார ரீதியாக சிரமத்தை ஏற்படுத்துவதாக புகார் தெரிவித்தனர்.
தற்போது தான் நாடு இயல்புக்கு திரும்பி உள்ளது இந்த நேரத்தில் சுங்க கட்டண உயர்வு அதிருப்தி அளிப்பதாக வாகன ஓட்டிகள் கூறினர். இந்த நேரத்தில் நடப்பு ஆண்டின் 2 – வது முறையாக சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கட்டண முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சுங்க சாவடிகள் வாயிலாக பயணிக்கும் கார், வேன்களுக்கு 5 ரூபாயும், டிரக், பஸ், போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.150 வரையிலும் குறிப்பாக திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் பேருந்துகளுக்கான சுங்க கட்டணம் ரூ. 185 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், லாரிக்கான கட்டணம் ரூ.300 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
LPG சிலிண்டர் விலை 96 ரூபாய் குறைப்பு – ரூ.2045 ஆக நிர்ணயம்!
இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோரிக்கைகள் எழுந்து வருகிறது. வரலாறு காணாத பண வீக்கத்தை நாடு எதிர்கொண்டு வருகிறது. இதனால் சிறு குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுங்க கட்டணத்தை உயர்த்தி பொது மக்களின் முதுகை உடைப்பதா? என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு இருக்கும் என்ற கொள்கை மிக அபத்தமான ஒன்றாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்