4,500 இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு – வலுக்கும் கோரிக்கை!! அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் 10 ஆண்டுகளாக 4,500 இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாத நிலையில் முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு:
தமிழகத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு சரியான முறையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்கப்படுவதில்லை என பல்வேறு குற்றசாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் 4,500 இளநிலை உதவியாளர்களுக்கு 10 ஆண்டுகளாக பதவி உயர்வு கோரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அரையாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் ஒரே வினாத்தாள் – ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு!
அதாவது, தமிழகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இளநிலை உதவியாளர்களை நேரடி பணி நியமனம் மூலமாக நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது வரையிலும் நேரடி பணி நியமனம் மூலமாகவே இளநிலை உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதனால் தான், 4,500 இளநிலை உதவியாளர்களுக்கு 10 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில், 4,500 இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வரையிலும் நேரடி உதவியாளர் பணியிடத்தை நிறுத்தி வைக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கல்வித்துறை இதில் முழு கவனம் செலுத்தி உடனடியாக பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.