மாணவர்கள் பள்ளிக்கல்வியை தொடர திட்டங்கள் வகுப்பு – மத்திய அரசின் வழிமுறைகள்!
கொரோனாவால் மாநிலங்கள் தோறும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக கல்வியை தொடருமாறு மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிகள் துவக்கம்:
கொரோனா பேரலை காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருக்கும் பள்ளிகளால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுவது குறித்து மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. மாணவர்களுக்கு மீண்டுமாக கல்வியை கொடுக்க வேண்டும் என கூறி மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு சில வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. அந்த வகையில் வீடுகளில் இருக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை கல்வியாண்டு துவங்குவதற்கு முன்னதாகவே விநியோகிக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
டிஜிட்டல் கருவிகள் மூலம் பாட சம்மந்தமான வீடியோக்களை அனுப்பி, மாணவர்களை கற்கும் படி செய்ய வேண்டும். தவிர அம்மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை அசைன்மென்ட்களை கொடுத்து, வாரம் முழுவதும் படிப்பதற்கான திட்டங்களை உருவாக்கும் படி மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அடுத்த கல்வியாண்டிற்கு தேவையான பயிற்சிகளை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து கழக ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு – அரசாணை வெளியீடு!!
கூடுதலாக வீடுகளில் இருந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு, நூலகங்களில் இருந்து தேவையான புத்தகங்களை விநியோகிக்க வேண்டும். பேரிடர் போன்ற காலங்களில் வகுப்பறைகளுக்கு வெளியே வைத்து மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க முயற்சி எடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தவிர தேர்வுகளை வைத்தும், மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு கல்வி வழங்கும் முறைகளில் இருந்து மாணவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.