தீபாவளி வரை ரேஷன் பொருட்கள் இலவசம் – பிரதமர் மோடி அறிவிப்பு!!
இந்தியாவில் வரும் தீபாவளி பண்டிகை வரை நாட்டு மக்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவர் எனவும் கூறியுள்ளார்.
ரேஷன் பொருட்கள் இலவசம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளன. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ளனர். தினக்கூலிகள் இந்த ஊரடங்கால் வேலையிழந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர். ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணங்களையும் அறிவித்து வருகின்றனர். நோய் தடுப்பு நடவடிக்கையையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
கடந்த வருடம் முதலே நம் நாட்டு பிரதமர் மோடி அவர்கள் அவ்வப்போது காணொளி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பற்றியும் அரசுகள் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை பணிகள் பற்றியும் பகிர்ந்து வருகிறார். அரசியல் தலைவர்களுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டு எடுக்கும் முக்கிய முடிவுகளை காணொளி மூலம் மக்களுக்கு நேரடியாக தெரிவித்து வருகிறார்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் & மறுதேர்வு தேதிகள் – வெளியீடு !
இன்று பிரதமர் காணொளி மூலம் உரையாடினார். அதில் கொரோனா பெருந்தொற்று காலம் நிலவுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் மத்திய அரசு சார்பாக குடும்ப அட்டை தாரர்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மோடி அவர்கள் வரும் தீபாவளி பண்டிகை வரை ரேஷன் கடைகளில் பொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் நாட்டில் 80 கோடி மக்கள் பயன் பெறுவார்கள் என காணொளி உரையில் கூறியுள்ளார்.