தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தவர் கலைஞர் – சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் தமிழில் உரை!

0
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தவர் கலைஞர் - சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் தமிழில் உரை!
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தவர் கலைஞர் - சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் தமிழில் உரை!
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தவர் கலைஞர் – சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் தமிழில் உரை!

தமிழக சட்டமன்ற பேரவையின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், முன்னாள் முதல்வர் மற்றும் திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி அவர்களை பற்றி தமிழில் பேசியுள்ளார்.

தமிழில் உரை:

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில், விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு தனிவிமானம் மூலம் டெல்லியில் இருந்து பிற்பகல் வந்தார். தமிழக முதல்வர் குடியரசுத் தலைவரை விமான நிலையத்திற்கு வேரில் சென்று வரவேற்றார். முதல்வர் விமான நிலையத்தில் தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களைப் பரிசாக குடியரசுத் தலைவருக்கு வழங்கினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா – குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை!

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் உருப்படத்தை திறந்து வைத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் அதன்பின்னர் உரையாற்றினார். அப்போது, கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதிலும் பெருமை அடைகிறேன். சட்டப்பேரவையில் இதுவரை இருந்த அனைத்து சபாநாயகர்களுக்கும் வாழ்த்துக்கள். இதுவரை இருந்த அனைத்து முதல்வர்களும் சட்டப்பேரவையின் மாண்பை காப்பாற்றி உள்ளனர். மேலும், வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர் கருணாநிதி.

TN Job “FB  Group” Join Now

சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு இந்த சட்டமன்றம் உதவியாக இருந்துள்ளது. அறியாமைக்கும், ஏழ்மைக்கும் எதிராக குரல் கொடுத்தவர் கருணாநிதி. இந்த அவையில் இன்று கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நீண்ட காலம் தனது பங்களிப்பை அளித்தவர் கருணாநிதி. மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி. கலைத்துறையிலும் கருணாநிதியின் பங்கு அளப்பரியது, அதில் பல சாதனைகளையும் அவர் செய்துள்ளார் என்று குடியரசுத் தலைவர் தமிழில் பேசினார். அவர் தமிழ் பேசியதற்கு விழாவில் பலத்த கைதட்டல்கள் எழுந்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!